(வை.வேதரெத்தினம் தெளிவுரை)

விரும்பும் பதிவைத் தேடுக !

நன்றி ஒருவற்கு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நன்றி ஒருவற்கு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 20 டிசம்பர், 2021

மூதுரை (வை.வேதரெத்தினம் உரை) (01) நன்றி ஒருவற்குச் செய்தக்கால் !

நற்குணமுடைய ஒருவனுக்குநாம் செய்யும்  உதவி !

 ------------------------------------------------------------------------------------------------

தமிழ் மூதாட்டி ஔவையார் அருளிச் செய்த நூல்களுள் ”மூதுரையும் ஒன்றுமுப்பது வெண்பாக்களைக் கொண்ட இந்நூலுக்கு “வாக்குண்டாம்” என்று இன்னொரு பெயருமுண்டு.

 

------------------------------------------------------------------------------------------------

பாடல்.01.

-----------------------------------------------------------------------------------------------

 

நன்றி ஒருவற்குச் செய்தக்கா லந்நன்றி

என்று தருங்கொ லெனவேண்டா – நின்று

தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்

தலையாலே தான்றரு தலால்.

 

--------------------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்

--------------------------------------------------------------------------------------------------

 

நன்றி ஒருவற்குச் செய்தக்கால் அந்நன்றி

என்று தருங்கொல் என வேண்டா – நின்று

தளரா வளர் தெங்கு தாள் உண்ட நீரைத்

தலையாலே தான் தருதலால்.

 

--------------------------------------------------------------------------------------------------

 

நன்றி” என்னும் சொல்லுக்கு “நன்மை” என்று பொருள்இக்காலத்தில் ”நன்றி” என்னும் சொல் வேறு பொருளில்  கையாளப்படுகிறது !


---------------------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:

------------------------------------

 

நின்று = நிலைபெற்று ; தளரா = சோர்ந்து போகாமல் ; வளர் தெங்கு = வளர்கின்ற தென்னையானது ; தாள் உண்ட நீரை = தன் அடியால் (அடி மரத்தால்) உண்ட தண்ணீரை ; தலையாலே = தன் முடியாலே ( உச்சிப் பகுதியாகிய காய்கள் தோன்றும் பகுதியாலே) ; தான் தருதலால் = (சுவையுள்ள இளநீராக்கித்) தானே தருதலால் ; ஒருவற்கு = (நற்குணமுள்ள) ஒருவனுக்கு ; நன்றி செய்தக்கால் = (நன்மை) உதவி செய்தால் ; அந்நன்றி = அவ்வுதவியை ; என்று தருங்கொல் = அவன் எப்பொழுது செய்வானோ ; என வேண்டா = என ஐயுற வேண்டியதில்லை.


--------------------------------------------------------------------------------------------------

பொருளுரை:

----------------------

 

நற்குணமுடைய ஒருவனுக்குநாம் ஓர் உதவி செய்தால்அவ்வுதவிக்குப் பதில் உதவியை அவன் எப்பொழுது நமக்குச் செய்வான் என்று ஐயுற  வேண்டாம்ஏனெனில்எப்படி ஒரு தென்னை மரமானதுதன் அடிப்பகுதியால் நிலத்திலிருந்து உறிஞ்சிய நீரைநுனிப் பகுதியால் சுவையுள்ள இளநீராக்கித் தானே தருகிறதோ, அவ்வாறே, அம்மனிதனும் தகுந்த நேர்த்தில் தானாக முன்வந்து நமக்குப் பதிலுதவியைக் கட்டாயம் செய்திடுவான் !


------------------------------------------------------------------------------------------------

கருத்துச் சுருக்கம்:

-------------------------------

 

பிறருக்கு நாம் செய்யும் உதவியைஎதையும் எதிர்பார்த்துச் செய்யக் கூடாதுநாம் செய்யும் உதவியால் உருவாகும் நற்பயன்நமக்கு உதவி தேவையுள்ள நேரத்தில் கட்டாயம் கிட்டும் என்பதே இப்பாடலின் கருத்துரை.

 

----------------------------------------------------------------------------------------------- 

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

மூதுரை வலைப்பூ.

[தி.: 2052 : சிலை (மார்கழி) 06)

{21-12-2021}

-----------------------------------------------------------------------------------------------